முகப்பு
தமிழ்நாடு

பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ்!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 1:54 PM
ஓ.பன்னீர்செல்வம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அதிமுக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.