முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு 8 மாவட்டங்களில் லேசானது மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
rain update in tamilnadu
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்ட்ங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகிளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

காரைக்குடி, லப்பைக்குடிக்காடு, தேவலா, தாமரைப்பாக்கம், திருத்தணி தலா 3 செ.மீ மழையும், திருவள்ளூர் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →