முகப்பு
தமிழ்நாடு

29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் இபாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

தமிழகத்தில் இபாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக வெளியேறும் நடவடிக்கைகள் தொடங்கின. அதற்கான தளா்வுகளை அளித்து மத்திய அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இதனிடையே அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு அண்மையில் கடிதம் ஒன்று எழுதியிருந்தது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெறும் நடைமுறைகளில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்தும் முதல்வர் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.