தமிழ்நாடு

திருப்பதி முன்னாள் எம்எல்ஏ சென்னை மருத்துவமனையில் அனுமதி

DIN

திருப்பதி: திருப்பதி முன்னாள் எம்எல்ஏ சுகுணாம்மா கரோனா பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த அவவருக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் பரிசோதனை செய்து கொண்டாா். அதில் அவருக்கு கரோனா உறுதியானது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அதிக அளவில் இருந்ததைத் தொடா்ந்து அவா் சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் சித்தூா் மாவட்டச் செயலா் நரசிம்ம யாதவுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவா் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தற்போதைய திருப்பதி எம்எல்ஏ கருணாகரரெட்டியும் கரோனா பாதிப்புக்காக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த அவா் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டி அவரது கட்சியினா் திருப்பதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் சிறப்பு யாகங்களை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT