தமிழ்நாடு

எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி காலமானார்

DIN

எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி (74) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி அளவில்  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

எழுத்தாளரான வா. மூர்த்தி தமிழகத்தில் வருமான வரி ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். முற்போக்கு சிந்தனை, ஆழ்ந்த படிப்பு, ஆங்கில நாளேடுகளிலும்,  தமிழ் இதழ்களிலும் கலை, இலக்கியம் பற்றிய  கட்டுரைகள் எழுதியவர். தீபம், கணையாழி, ஞானரதம் முதற்கொண்டு தளம் இதழ் வரையும் இவரது படைப்புகள் வந்தன.

அர்த்தம் இயங்கும் தளம் எனும் கருத்தாக்க நூல், குறுநாவல் தொகுப்பு, சிறுகதைகள், மொழியாக்க கவிதைகள் என பரந்துபட்ட இலக்கிய படைப்புலகில் அயராது இயங்கியவர். 

கூர்மையான இலக்கிய விமர்சகர், இலக்கிய கடிதங்கள், தீபத்திலும், இறுதியாக யுகமாயினி இதழிலும் இலக்கிய தொடர்கள் எழுதியவர். தளம் கலை இலக்கிய இதழின் குழுவில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கைத் துணைவர் சுதா மூர்த்தி (வங்கி அலுவலர்), ஒரே மகனும் எழுத்தாளருமாகிய பிரபு ராம், பேரக்குழந்தைகள் உள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ சாலை 5வது குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3-4 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும். 

தொடர்பு எண் 9790983495, 9444268328

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT