முகப்பு
தமிழ்நாடு

பாமக போராட்டம்: தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை நிறுத்தம்

பாமகவினரின் போராட்டத்தால் சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
ரயில் மீது கற்களை வீசிய பாமகவினர்
பகிர்:

பாமகவினரின் போராட்டத்தால் சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

வன்னியர் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வெளிமாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் ரயில் மீது பாமகவினர் கற்களை எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து பாமகவினர் சென்னைக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, பாமகவினர் போராட்டத்தால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →