சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பலி
சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM
சீர்காழி: சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்(31). வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் குடை பிடித்தப்படி சாலையில் சென்றுள்ளார். அப்போது கனமழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொள்ளிடம் போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிந்து விசாரனை மெற்கொண்டுள்ளனர்.
Advertisement