புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் திண்டிவனம் அருகே நெய்குப்பி நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.