எளாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு 
தமிழ்நாடு

எளாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எளாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எளாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு பெரிய ஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளருமான முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். பெரிய ஓபுளாபுரம் அதிமுக நிர்வாகி ஏழுமலை, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், குமரன்நாயக்கன் பேட்டை கே.பி.ஆரோன், நேதாஜி முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து எளாவூர் பஜாரில் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்  அகல் விளக்கு ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT