தமிழ்நாடு

எளாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எளாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு பெரிய ஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளருமான முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். பெரிய ஓபுளாபுரம் அதிமுக நிர்வாகி ஏழுமலை, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், குமரன்நாயக்கன் பேட்டை கே.பி.ஆரோன், நேதாஜி முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து எளாவூர் பஜாரில் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்  அகல் விளக்கு ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT