முகப்பு
தமிழ்நாடு

இந்த ஆண்டில் ஆவின் நிறுவன வருவாய் ரூ.227 கோடி அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
இந்த ஆண்டில் ஆவின் நிறுவன வருவாய் ரூ.227 கோடி அதிகரிப்பு
பகிர்:


சென்னை: கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  தமிழக அரசு பால் வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் ஆவினில் பால் விற்பனை மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை, இதர விற்பனைகள் அதிகரித்து விவசாயிகளின் வாழ்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது.

ஆவினின் பணப்பரிவர்த்தனை 2019-2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மூலம் சுமார் ரூ.335 கோடியே 821 லட்சம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பணப் பரிவர்த்தனையில் 2020-2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் ரூ. 2392.95 கோடியும், இணையத்தின் மூலம் ரூ.1242.54 கோடியும் என மொத்தம் ரூ.3635.50 கோடி ஆகும். ஆக சென்ற நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளது.

கடும் புயலிலும், காற்றிலும், மழையிலும் மற்றும் கரோனா தொற்று காலத்திலும் மக்கள் சேவையில் ஆவினின் பங்கு மகத்தானதாக அமைந்துள்ளது. இதனால் ஆவினுக்கு கூடுதலான மக்களின் வரவேற்பும், நன்மதிப்பும் அதிகமானதால் ஆவின் நிறுவனத்திற்கு இலாபம் அதிகரிப்பதோடு விவசாயிகளின் நம்பிக்கையும் அதிகம் பெற்றுள்ளது.

மேற்கண்ட தகவலை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →