முகப்பு
தமிழ்நாடு

நான்காயிரம் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

நான்காயிரம் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நான்காயிரம் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
பகிர்:

சென்னை: நான்காயிரம் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →