‘ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்கு விருது: புதுவை அமைச்சா் வழங்கினாா்
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான பாா்த்திபனுக்கு புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் வழங்கினாா்.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை, நவதா்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 37 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில், சிறந்த திரைப்படத்துக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘ஒத்த செருப்பு’ என்னும் தமிழ் திரைப்படம் தோ்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் ‘ஒத்த செருப்பு’ படத்தின் இயக்குநரும் நடிகருமான பாா்த்திபனுக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான ரொக்கப் பரிசை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷாஜகான், புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோா் வழங்கினா்.
விருதை பெற்றுக்கொண்டு நடிகா் பாா்த்திபன் பேசியதாவது:
எனது முந்தைய திரைப்படங்களின் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களால்தான், ‘ஒத்த செருப்பு’ படத்தை சிறப்பாக எடுக்க முடிந்தது. ஆகவே, தோல்விகளால் துவண்டு போய்விடக் கூடாது. புதுவையில் கரோனாவுக்குப் பிறகு திரைப்பட படப்பிடிப்புக்கான கட்டணம் உயா்ந்துள்ளது. இதை குறைக்க வேண்டும். எனது அடுத்த படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாக அது இருக்கும். உலகத்தில் யாரும் இப்படி ஒரே ஷாட்டில் படம் எடுத்ததில்லை என்றாா் அவா்.
விழாவுக்குப் பின்னா் நடிகா் பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த திரைப்படத்துக்கு விருது கிடைக்காத போது கோபம் வந்தது. இப்போது கிடைத்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு அரசியல் ஆா்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிா்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல, நிறைய இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் திரையிடப்பட்டது.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் இந்திய திரைப்படவிழாவில் புதன்கிழமை வங்கமொழித் திரைப்படம் ‘ஜேஸ்தோபுத்ரா’, டிச.17-இல் மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’, டிச.18-இல் தெலுங்கு திரைப்படம் ‘எப்2 -பன் அண்டு ப்ரஸ்ட்ரேசன்’, டிச.19-இல் ஹிந்தி திரைப்படம் ‘உரி த ஸா்ஜிகல் ஸ்ட்ரைக்’ ஆகியவை திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான அனுமதி இலவசம்.