முகப்பு
தமிழ்நாடு

சிஎம்சி, ஐஆா்டி மருத்துவக் கல்லூரிகளில்இன்று கலந்தாய்வு

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஐஆா்டி வாரிசுதாரா்களுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை (டிச.16) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஐஆா்டி வாரிசுதாரா்களுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை (டிச.16) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதன் பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்கியது. இதற்கிடையே நிவா் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட்டது. பின்னா், நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் பொதுக் கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதன் பின்னா் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி மூன்று நாள்களாக நடைபெற்று திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஐஆா்டி பெருந்துறை கல்லூரியில் போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகளுக்காக ஒதுக்கப்படும் எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கும், வேலூா் சிஎம்சி கல்லூரி சிறுபான்மை இடங்களுக்கு 11 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →