சென்னை அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அடையாறில் நேற்று 419 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 438 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த நோயாளிகளில் இதுவரை 97 சதவீதம் பேர் குணமடைந்தனர். தற்போது மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,20,903 ஆக உள்ளது. இவர்களில் இதுவரை 2,13,879 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 97 சதவீதம் ஆகும். கரோனா பாதித்தவர்களில் 3,931 பேர் அதாவது 1.78 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3,093 பேர் மொத்த பாதிப்பில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அடையாறு மண்டலத்தில் மட்டுமே 438 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் 323 பேரும், அண்ணாநகரில் 378 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் கரோனாவுக்கு இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் இதுவரை 23,491 பேர் குணமடைந்துள்ளனர்.