விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து போராட்டம்
புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடுவிவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து போராட்டம்
புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சி: புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் பல்வேறு அமைப்பினர், கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்டை ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை மாலை வந்த ஜனசதாப்தி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை இருப்புப்பாதையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர். இந்த சம்பவத்தால், திருச்சி கோட்டை ரயில்நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.