டிச.26-இல் சென்ட்ரல் - திருப்பதி சிறப்பு ரயில் ரத்து
கூடூா் - திருப்பதி மாா்க்கத்தில் உள்ள திருச்சானூா் ரயில் நிலையம் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடூா் - திருப்பதி மாா்க்கத்தில் உள்ள திருச்சானூா் ரயில் நிலையம் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை, சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06057) வரும் 26-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலும் (06008), அன்றைய தினம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் (06057) சிறப்பு ரயில், சனிக்கிழமை (டிச.19) முதல் டிச.25-ஆம் தேதி வரை பகுதி ரத்து செய்யப்பட்டு, ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும்.
இதே போல், திருப்பதி - சென்னை, சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06008 ), சனிக்கிழமை (டிச.19) முதல் டிச.25-ஆம் தேதி வரை திருப்பதிக்கு பதிலாக ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு, சென்ட்ரல் வந்தடையும்.
வழி மாற்றம்: ராமேசுவரம் - ஓகா இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06733), டிச.25-ஆம் தேதி காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வழிமாற்றம் செய்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது திருப்பதியில் நிறுத்தப்படாது.
நாகா்கோவில் - ஷாலிமாா் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (02659), டிச.20-ஆம் தேதி காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா் வழியே வழிமாற்றம் செய்து இயக்கப்படுகிறது. இந்த ரயில், சித்தூா், திருப்பதியில் நிறுத்தப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.