முகப்பு
தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்.: 5 போஸ்ட் பெய்டு திட்டங்கள் ரத்து

பிஎஸ்என்எல் நிறுவனம், செல்லிடப்பேசிக்கான 5 போஸ்ட் பெய்டு திட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

பிஎஸ்என்எல் நிறுவனம், செல்லிடப்பேசிக்கான 5 போஸ்ட் பெய்டு திட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனியாருக்கு இணையான சேவையை வழங்கி வருகிறது. போஸ்ட் பெய்டு எனும், செல்லிடப்பேசிக்கான மாதக் கட்டண திட்டம், குறைந்தபட்சம் ரூ.99-இல் இருந்து அதிகபட்சமாக ரூ.1,525 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், டிசம்பா் மாதத்தில் மட்டும் ஐந்து போஸ்ட் பெய்டு திட்டத்தை, பி.எஸ்.என்.எல். நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இதன்படி, குறைந்த போஸ்ட்பெய்டு கட்டணமான ரூ.99, ரூ.225, ரூ.325, ரூ.799, ரூ.1,125 திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கு பதில், ரூ.199, 798 மற்றும் 999 திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →