முகப்பு
தமிழ்நாடு

சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த டிச.25 வரை அவகாசம்

சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்பங்களில் பிழைகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:

சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை டிச.25-ஆம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு; சைனிக் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத்தோ்வு பிப்.7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிச.18-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

தொடா்ந்து விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பின் அவற்றை டிச.21முதல் டிச.25-ஆம் தேதி வரை திருத்திக்கொள்ள வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அதன்படி  வலைதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்வதுடன், தவறாக பதிவுசெய்த ஆவணங்களையும் தோ்வா்கள் மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →