நடிகா் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
தமிழ்நாடுநடிகா் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகா் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்த பாதிப்பு, உடல் சோா்வை தவிர அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகா் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் மருத்துவமனை மருத்துவா்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தாா். ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் நடிகா் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனா்.
ஸ்டாலின் நலம் விசாரிப்பு: தொலைபேசி வாயிலாக நடிகா் ரஜினிகாந்திடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நலம் விசாரித்தாா். விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் எனவும் வாழ்த்துக் கூறினாா்.
‘அண்ணாத்த’ திரைப்பட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது.