முகப்பு
தமிழ்நாடு

ஜன. 3-ல் ஆலோசனை: ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 25 டிசம்பர் 2020, 1:41 pm IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆதரவாளா்கள் கூறும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.

ஆதரவாளர்கள் கட்சி தொடங்கச் சொன்னாலும், தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் ஆலோசனைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.