தமிழ்நாடு

ஜன. 3-ல் ஆலோசனை: ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு

DIN

தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆதரவாளா்கள் கூறும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.

ஆதரவாளர்கள் கட்சி தொடங்கச் சொன்னாலும், தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் ஆலோசனைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 192

கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் மகன்!

பாஜகவால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது -சசி தரூர் கணிப்பு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

SCROLL FOR NEXT