முகப்பு
குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி
தமிழ்நாடு

ஊனமுற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி அருகே ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் தற்கொலை முயற்சி.

தமிழ்நாடு

ஊனமுற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி அருகே ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் தற்கொலை முயற்சி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் அயன் பொம்மையா புரத்தில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.       

தூத்துக்குடி மாவட்டம் அயன் பொம்மையா புரத்தை சேர்ந்தவர் முனியம்மாள் இவரது 14 வயது ஊனமுற்ற மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கடந்த 15ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சம்பந்தமாக விளாத்திகுளம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து போக்சோ சட்டத்தில்  சிறையில் அடைத்தன. 

ஆனால் ஐயப்பனை ஜாமீனில் கொண்டுவரும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிலர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து முனியம்மாள் தனது மகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →