வெப்பச் சலனம் காரணமாக, தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச் சலனம் காரணமாக, தென்தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் வட வானிலை நிலவும். காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.