வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு வியாழக்கிழமை கடலில் விடப்பட்டது.
வேதாரண்யம் மணியன்தீவு அருகில் உள்ள முனைக்காடு பகுதி கடற்கரையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கி தண்ணீர் குறைந்த சேற்றுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.
அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலைய காவலர் வடிவேல் உள்ளிட்டோர் டால்பினை பாதுகாப்பாக மீட்டு ஆழமான கடல் பரப்புக்குள் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.