தமிழ்நாடு

மாணவர்கள், காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

DIN


கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், காவல் துறையினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, அங்கு பரபரப்பான சூழல் தென்பட்டது.

வேலையின்மை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும், டி.என்.பி.எஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று (செவ்வாய்கிழமை) பேரணி நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்த அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தின்போது மாணவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT