தமிழ்நாடு

மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தில்லியின் நொய்டா பகுதியில் அமைந்துள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

DIN

தில்லியின் நொய்டா பகுதியில் அமைந்துள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதையடுத்து சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தில்லியின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நொய்டாவின் செக்டார் 20, 24 மற்றும் செக்டார் 39 ஆகிய பகுதிகளில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை என அனைத்து வகை மதுக்கடைகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவித்து கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT