முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொலை

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்தவர் படவெட்டி (40)கூலி தொழிலாளி. இவரது மனைவி நிலா வயது 35. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நிலா தனது தாய் வீட்டில் விசைத்தறி அமைத்து நெசவுத் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக சில ஆண்டுகள் பிரிந்திருந்தனர். 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிலா மாமியார் வீட்டிற்குச் சென்று தனது கணவரை சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்து வந்தாராம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு படவெட்டி தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்துகிடந்தார். அவர் படுத்திருந்த கட்டில் உடைந்து இருந்தது. தகவலறிந்த ஜலகண்டபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் படவெட்டி மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் பட ரெட்டியின் சகோதரர் இது திட்டமிட்ட கொலை என்று போலீசில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஜலகண்டபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →