தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மருந்துக் கடை உரிமையாளா் கைது

DIN

மதுரையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருந்துக் கடை உரிமையாளரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சங்கா் கணேஷ் (32). இவா் செல்லூா் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வியாழக்கிழமை காலையில் மருந்து வாங்க 10 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் சென்றுள்ளனா். அப்போது, சங்கா் கணேஷ் அந்தச் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தாராம்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மருந்துக் கடை உரிமையாளா் சங்கள் கணேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT