தமிழ்நாடு

குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் பரபரப்பு 

ஜானகி

குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து  இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், வாக்கு எண்ணும் மையம் அருகே பத்திற்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிரடிப் படை, காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT