தமிழ்நாடு

காருக்கு டீசல் தரப்படாததால் காரைக்காலில் இருந்து பேருந்தில் பயணித்த புதுச்சேரி அமைச்சர்

DIN


காரைக்கால் :  அரசு நிறுவன டீசல் பங்க்கில் அமைச்சர் காருக்கு டீசல் தரப்படாததால் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை பேருந்தில் புதுச்சேரிக்கு பயணமானார்.

புதுச்சேரி அரசு நிறுவனமான கான்ஃபெட் மூலம் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. அரசு வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது.

முதல்வர், அமைச்சர், வாரியத் தலைவர்கள், ஆட்சியர், காவல்துறையினரின் வாகனங்களுக்கு அரசு நிறுவன பங்க்கில் டீசல் நிரப்பிக்கொள்ளும்போது, அதற்கான நிலுவைத் தொகை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் செல்வதற்காக டீசல் நிரப்ப ஓட்டுநர் அமைச்சர் காரை கொண்டு சென்றபோது, டீசல் பங்க்கில் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால் இருக்கும் எரிபொருளை பயன்படுத்தி காரைக்கால் வந்த அமைச்சர், அரசு நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுவிட்டு புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு புதுச்சேரிக்கு பயணமானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT