திருவள்ளூர் மாவட்ட அரசுப்பள்ளியில் குரங்குகள் தொல்லை; மாணவர்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் தேனம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் குரங்குகள் தொல்லை அதிகாரத்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் தேனம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் குரங்குகள் தொல்லை அதிகாரத்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தேனம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல் மாளிகை பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இதில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் தொல்லை கொடுக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது. குரங்குகளின் அச்சத்தால் மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் பயப்படுகின்றனர்.
இதையடுத்து. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.