தமிழ்நாடு

ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநில குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு 

DIN


திண்டுக்கல்: ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் மும்பை விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அந்த சேர்ந்தது. அந்த ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் பலர் ரயில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மூன்று வயது குழந்தையுடன் ரயிலிலிருந்து இறங்கியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தி  மொழியில் பேசி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையை அவர் கடத்தி வந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கூறியதாவது:
பிடிபட்ட இளைஞர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடன் வந்த குழந்தை அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். குழந்தை எதற்காக கடத்தி வந்தார், எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT