சேலத்தில் இன்று மேலும் 100 பேருக்குத் தொற்று: பாதிப்பு 1,134 ஆக உயர்வு
சேலத்தில் கரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் கரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவியுள்ள நிலையில், இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021 ஆக உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,134 ஆக உயர்ந்துள்ளது.