முகப்பு
தமிழ்நாடு

தாராபுரத்தில் தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்  விஷ மாத்திரையைத் சாப்பிட்டு  சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
தற்கொலை செய்துகொண்ட விவசாயி
பகிர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்  விஷ மாத்திரையைத் சாப்பிட்டு  சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர்பாளையம் கிராமம் குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாயக் கடன் பெற்றிருந்தார். 

இந்தநிலையில் வறட்சி மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் சரிவர கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனிடையே  கரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கடந்த 4 மாதங்களாக கடன் தொகையை செலுத்ததால் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கே சென்று மிரட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் ராஜாமணி தென்னை மரத்துத்து பயன்படுத்தும்  செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு சனிக்கிழமை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜாமணி உயிரிழந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →