கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? - உயர்நீதிமன்றம் கேள்வி
கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு 8 வாரத்தில் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் யார், யார் எவ்வளவு தொகை கொடுத்துள்ளார்கள்? எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற முழு விபரத்தை அடுத்த 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.