தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,535  கனஅடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. விநாடிக்கு 803 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2,535 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 70.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.26 டி.எம்.சியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரமத்தி வேலூரில் ரூ. 45 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

கிராமப்புற மக்கள் நலனுக்கான மருத்துவ வாகனம் தொடக்கம்

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நான் முதல்வன் ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்வு

உயா்கல்வி முடித்து தொழில்முனைவோராக மாற வேண்டும்

ஞானோதயா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT