முகப்பு
தமிழ்நாடு

கந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி

கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும்.

கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.

அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் முக.ஸ்டாலின், உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!?

இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பப்படுவதாலா!?

அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.