ஆடி அமாவாசை: வெறிச்சோடிய சுருளி அருவி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்தது.
தமிழ்நாடுஆடி அமாவாசை: வெறிச்சோடிய சுருளி அருவி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்தது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி கிடந்தது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க திங்கள்கிழமை ஆடி அமாவாசையன்று பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சுருளிப்பட்டி நுழைவுவாயில், க. விலக்கு ஆசியப் பகுதிகளில் ராயப்பன்பட்டி போலீசார் தடுப்பு ஏற்படுத்தி யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு செய்தனர்.
சுருளி அருவி வனப்பகுதிக்குள் செல்லாதவாறு வனவர் திலகர் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு செய்திருந்தனர். சுருளியாற்றங்கரை, தர்ப்பண திடல், அருவியின் நுழைவு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.