முகப்பு
தமிழ்நாடு

கரோனாவால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியது

கரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பணிக்கு வந்திருந்த பெண் ஊழியர்கள்.
பகிர்:

கரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டம் முழுவதும் 316 ர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் குணமடைந்தவர்கள் தவிர்த்து 151 பேர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களும் அடங்குவர். அவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகம் முழுமையாக மூடப்பட்டது. மூன்று நாட்களாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதற்கிடையே திங்கள்கிழமை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், தபால் பிரிவில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதுவரை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை முதல் அனைத்து துறை அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளன. அதேவேளையில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.       

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனேயே ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →