தமிழ்நாடு

புதுகை போசம்பட்டியில் மோதல்: வானத்தை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல்துறை சரகம் போசம்பட்டி கிராமத்தில் உடையப்பன், திருநாவுக்கரசு ஆகியோருக்கிடையே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் கடந்த சில மாதங்களாகவே இருந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து கே. புதுப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிக் கொண்டதைப் பார்த்த சரவணன், கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். இதையடுத்து கலவரம் மெல்ல ஓய்ந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் போசம்பட்டி கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT