மாதவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாதவரத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதவரத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தனர்.