தமிழ்நாடு

இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி

DIN

தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார். 

நாடு முழுவதும் பொது முடக்கம் 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கரோனா அல்லாத பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சற்று முன்னதாக, மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 

இதையடுத்து,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT