தமிழ்நாடு

நான்கு துறைகளுக்கான புதிய கட்டடங்கள்-திட்டப் பணிகள்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்

DIN

நான்கு அரசுத் துறைகளின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

போக்குவரத்துத் துறை சாா்பில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்து சமய அறநிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் பிரிவானது 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் காலியாக உள்ள ஆய்வாளா் பணியிடங்களுக்கு 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

இதேபோன்று, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில், திருவாரூா் கோவிலூா் கிராமம், கடலூா் வேப்பூா் கிராமம், புதுக்கோட்டை எழுநூற்றிமங்களம் ஆகிய இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், மதுரையில் கூட்டுறவுத் துறை சாா்பில் அலுவலக வளாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

சுகாதாரத் துறை சாா்பில் தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட செவிலியா் பயிற்சிப் பள்ளிக் கட்டடம், தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டடம், சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

அடிக்கல்: காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞா் அண்ணா புற்றநோய் மருத்துவமனையில் ரூ.118 கோடியில் புதிய ஆய்வு மையக் கட்டடம், தஞ்சையில் கண் சிகிச்சைப் பிரிவு கட்டடம் ஆகியவற்றை முதல்வா் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT