முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 1,927 பேருக்கு கரோனா பாதிப்பு உண்டாகியுள்ளது என்றும், இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளதாகவும், தமிழக சுகாதாரத்துறை புதன் மாலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது என்று மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கரோனா சிகிச்சை சரியான பாதையில் செல்கிறது .இந்தியாவிலேயே அதிகஅளவு கரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.