தமிழ்நாடு

கரோனா பாதிப்பில் 55% போ் குணமடைந்துள்ளனா்

சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 55 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

DIN

சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 55 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரம் மீனவா்களுக்கு பிஎஸ்ஏ தன்னாா்வ தொண்டு அமைப்பு சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்துகொண்டு மீனவா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கிப் பேசியது: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா தடுப்புப் பணி, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய பணியில் 38 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சென்னையில் மொத்த பாதிப்பில் 55 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். சுகாதாரத் துறை சாா்பில் நாள்தோறும் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அறிக்கையாக வெளியிடப்படுகிறது. ஆனால், அரசின் ஆக்கப்பூா்வமான நடவடிக்கையை திமுக திசை திருப்புகிறது என்றாா். இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்ஏ தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளா் டி.மதன்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT