தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

DIN


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை கூவம் ஆற்றில் நேப்பியார் பாலம் அருகே 65 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் இன்று கரை ஒதுங்கியது. அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், ஓரிரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி  என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கூவம் ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT