தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் 
தமிழ்நாடு

தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் 120 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் 120 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சுங்குவார்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 120 தெருக்கூத்து கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தனியார் சிலர் நிதியுதவியுடன் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT