பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் 120 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சுங்குவார்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 120 தெருக்கூத்து கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தனியார் சிலர் நிதியுதவியுடன் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.