செங்கல்பட்டில் இன்று 155 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 4,185 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடுசெங்கல்பட்டில் இன்று 155 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 4,185 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி இன்று மேலும் 155 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு 4,185 எட்டியுள்ளது.
இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.