தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) ஆயிரத்தைத் தாண்டியது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 68 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு நோய் பாதிப்பு இல்லாமல் பலியானவர்கள் 8 பேர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக பலியானோர்: இங்கே க்ளிக் செய்யவும்..