முகப்பு
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்தது: 31 மாணவர்கள் காயம்

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர். 

கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் - காமநாயக்கன்பட்டி  இடையே  வேல்ஸ் வித்யாலயா பள்ளிப்பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் 31 மாணவ - மாணவி படுகாயம் அடைந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். 

விபத்து குறித்து கொப்பம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →