முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலைதா 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அஇதிமுக சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:07 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலைதா 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அஇதிமுக சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் வடமாட்டிற்கு வேட்டி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழாவை தொடங்கி வைத்தனர்.

மதுரை, சிவகங்கை, களத்தில் இறங்கிய 15 காளைகளை 117 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கி வருகின்றனர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை களத்தில் வீரர்களை கலங்கடித்து விளையாடி வருகிறது. இதில் வீரர்களின் கைகளில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைக்கும், களங்கடித்த காளையை அடக்கிய வீரர்களின் அணிக்கும் என ரூ.7001/- ரொக்க பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் விழாவினை காண குவிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →